பொலிஸ் ஊடக பிரிவு இடைநிறுத்தம்!

உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊடக பிரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கமையவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த இடைநிறுத்தம் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இது வரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொலிஸ் ஊடக பிரிவினால், ஊடகங்களுக்கு செய்திகள் மற்றும் மக்களுக்கான அறிவித்தல்கள் என்பன வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
பொலிஸ் சட்டத்தின் கீழ், அவ்வாறான பிரிவு ஒன்று இல்லை எனவும், குறித்த பணியை பொலிஸ் மக்கள் பிரிவு எனும் பிரிவே அப்போதிருந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்தே அப்பிரிவை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில், பொலிஸ் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ருவன் குணவர்தன மற்றும் அவ்வலுவலகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போதிலும், அம்முயற்சி பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...