Friday, April 29, 2016 - 12:45pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸார் நால்வரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு (28) தங்களது கடமை நேரத்தின் பின்னர் சிவில் உடையில், மதுபான விடுதி ஒன்றிற்குள் நுழைந்து கலகம் விளைவித்ததோடு, ஆயுதத்தை காண்பித்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே, குறித்த நால்வரது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தம்புள்ளை உதவி பொலிஸ் அதிகாரி காமினி மீகஹகும்புரவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில், உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், இரு சாஜண்ட்கள் (Sergeant) மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகிய 4 பேரது பணியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment