Monday, June 15, 2020 - 2:51pm
துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபுன்கொடை தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடலில் நீராடச் சென்ற கத்தோலிக்க மதகுரு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய குறித்த மதகுரு, ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை துன்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment