நாமல் உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுதலை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

நாமல் ராஜபக்‌ஷ சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹலோ கோர்ப் நிறுவனத்தின் ரூபா 100 மில்லியன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால், கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுதர்சன் கனேகொட மற்றும் நித்யா சேனானி சமரநாயக்க ஆகியோரும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு இன்று (22) கொழும்பு, கோட்டை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் அவர்களுக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.

ஒவ்வொருவரையும், தலா ரூபா ஒரு இலட்சம் பணம் மற்றும் ரூபா 100 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


Add new comment

Or log in with...