- உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் சில சரத்துகளை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினாலும், சில சரத்துகளை சர்வஜன வாக்கெடுப்பின் மூலமுமே நிறைவேற்ற முடியுமென, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று (21) பாராளுமன்ற அமர்வின் போது, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
சபாநாயகரினால் விடுக்கப்பட்ட குறித்த அறிவிப்பு வருமாறு,
அறிவித்தல்
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உற்படுத்தப்பட்ட "அரசியலமைப்புக்கான இருபத்து ஓராவது திருத்தம்" எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதென்பதை பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
உயர் நீதிமன்றம் பின்வரும் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது:—
(i) சட்டமூலத்தின் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 23, 24, 26, 27, 28 மற்றும் 36 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதனால் அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
(ii) சட்டமூலத்தின் 2, 3, மற்றும் 4 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 4(உ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
(iii) சட்டமூலத்தின் 14 ஆம் வாசகம் தற்போது உள்ளவாறு அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்:
எனினும் சனாதிபதி தனது நியமத்தராக ஆள் ஒருவரை பேரவையின் உறுப்பினராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்ட உறுப்புரை 41அ(1) ஏற்பாடு செய்யுமாயின், அத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருதப்படும் ஏற்பாட்டை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட உறுப்புரை 41அ (6) பொருத்தமாகத் திருத்தியமைக்கப்பட்டால், மக்கள்தீர்ப்பின் அவசியம் இல்லாதொழியும்;
(iv) சட்டமூலத்தின் 19 ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
(v) சட்டமூலத்தின் வாசகம் 30(அ) மக்களின் நீதித்துறைத் தத்துவத்தை வரையறுப்பதற்கு நாடுவதுடன், அதனால் அது அரசியலமைப்பின் உறுப்புரைகள் 4(இ) மற்றும் 4(உ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
(vi) சட்டமூலத்தின் 39 ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 129(1) ஐ நீக்குவதற்கு நாடும் அளவுக்கு உள்ளதால் அரசியலமைப்பின் உறுப்புரை 4(இ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 இற்கு ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
(vii) அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரைகள் 2 மற்றும் 3 ஆகியவற்றுடன் சட்டமூலத்தின் 43 ஆம் வாசகம் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்; மற்றும்
(viii) சட்டமூலத்தின் 51 ஆம் வாசகம் ஏனையவற்றுடன் பிரதம அமைச்சர் தவிசாளராக இருக்கும் தேசிய பாதுகாப்புப் பேரவை என்று தலைப்பிடப்பட்ட XIX-இ அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு நாடுகின்றது;
முன்மொழியப்பட்டுள்ள உறுப்புரைகள் 156ஒ (1) மற்றும் 156ஒ (2) ஆகியவை அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரைகள் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;
எனினும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப் பேரவையின் ஆக்க அமைப்பை மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள உறுப்புரைகள் 156 ஒ(1) மற்றும்156ஒ (2) ஆகியவை திருத்தப்பட்டு சனாதிபதி முன்மொழியப்பட்ட பேரவையின் தவிசாளராக நியமிக்கப்படின் அத்தகைய ஒவ்வாமை இல்லாதொழியும்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இன்றைய சபை கூட்ட நடவடிக்கைகளின் அதிகார அறிக்கையில் அச்சிடப்பட வேண்டும் என நான் கட்டளையிடுகின்றேன்.
Add new comment