Saturday, June 26, 2021 - 12:36pm
கொழும்பு துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த MSC Messina கொள்கனல் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
300 மீற்றர் நீளம் மற்றும் 37 மீற்றர் அகலம் கொண்ட குறித்த கப்பலை தற்போது சிங்கப்பூர் நோக்கி கொண்டு செல்வதற்கான பணிகள் இடம்பெற்றுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
லைபீரிய கொடியுடனான குறித்த கப்பல், நேற்றையதினம் (25) இலங்கைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில், இலங்கையின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கு திசையில், சுமார் 480 கடல்மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த வேளையில் தீப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment