Monday, November 2, 2020 - 10:04am
ஊவா, கிழக்கு, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய, சப்பரகமுவ, ஊவா மாகாணங்களின் ஒரு சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Add new comment