Monday, October 12, 2020 - 10:45pm
மேலும் 51 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த 51 பேரும் மினுவாங்கொடை கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏனைய 36 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகியவர்களாவர்.
அதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.
Add new comment