Monday, November 16, 2015 - 4:30pm
அரச பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அனைத்து அரசியல் கைதிகளையம் விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று இன்று (16) இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக, நிபந்தனைகளின்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க என பல்வேறு பதாதைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment