Thursday, August 27, 2015 - 1:00pm
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து இன்று (27) அவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக கொழும்பு பிரதான நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய அறிவித்தார்.
ரேணுகா பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில், மத்திய வங்கியால் விற்பனை செய்யப்பட்ட முறி தொடர்பில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பணப்பரிமாற்றம் மற்றும் கிரேக்க முறி பிரச்சினை தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் குறித்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Add new comment