இரண்டு ஏக்கர் காடு தீயினால் நாசம்

 

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியின் மானாப்புல் வனப்பகுதியில் இன்று (05) திடீரென தீப்பிடித்ததால் சுமார் 2 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காற்றின் வேகம் காரணமாக தீ உக்கிரமடைந்து பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...