முழு முகம் மூடிய தலைக்கவச தடைக்கு மேலும் 3 மாத தடை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், முழு முகத்தையும் மூடும் வகையிலான தலைக்கவசத்தை (Full Face Helmet) பயன்படுத்துவதற்கு எதிராக பொலிஸார் விதித்த தடையுத்தரவுக்கு மேலும் 3 மாதங்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில், குறித்த விடயம் தொடர்பில், மூவரால் மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பிலான விசாரணை இன்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நீடிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

கொழும்பின் முன்னாள் நகர அவசர மரண பரிசோதகர் எட்வர்ட் அஹஹ்கம, அங்கீகாரம் பெற்ற கணக்காய்வாளர் சானக தசநாயக்க, ஓய்வு பெற்ற மேஜர் மனோஜ் நாலக ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...