Monday, May 23, 2016 - 3:15pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிற்காக முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (23) இரகசிய பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை, கொழும்பு கோட்டை நீதவான் நிசாந்த பீரிஸின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, நாராஹேன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பெரேரா கைது செய்யப்பட்டிருந்தார்.
Add new comment