ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாக கருதுங்கள்

- கடினமான காலங்களில் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்
- ஐரோப்பிய நாடுகளுக்கான தூதர்கள் தெரிவிப்பு

ஐரோப்பிய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருதுங்கள் எனவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இன்று (24) காலை கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன் போது, பொருளாதாரத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து உறுதியான செய்தியை அனுப்புவதற்கு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை இலகுவாக உதவ முடியும் என தூதரகத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்த உறுதியான செய்தி மூலம் சர்வதேச சமூகத்தினால் இலங்கைக்கு உதவ முடியும் என தூதுவர்கள் குழுவினர் சுட்டிக்காட்டினர்.

நாட்டின் 90% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்பதோடு, அவர்களில் 75% ஆனோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதன் மூலம் உணவு விநியோகம் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்காக, அவர்களுக்கான பயிர்ச்செய்கை காணி பிரச்சினைக்கு தீர்வாக, விவசாயம் செய்யப்படாத அரச காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிரந்தர தீர்வு காணும் பொருட்டும் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஒருபோதும் தலையிடாமல், கட்சி பேதமின்றி நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

இதன் போது முதலீடு, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பி (Denis Chaibi), பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு (Eric Lavertu), இத்தாலி குடியரசின் தூதர் ரீட்டா மனெல்லா (Rita Mannella), நோர்வே தூதுவர் டிரினே ஜுரான்லி எஸ்கடேல் (Trine Jøranli Eskedal), நெதர்லாந்து தூதுவர் (Tanja Gonggrijp), ஜேர்மனியின் தூதுவர் ஹொல்கர் லொதர் சொய்பர்ட் (Holger Lothar Seubert), ருமேனியா தூதுவர் கலாநிதி விக்டர் சூடியா (Victor Chiujdea), துருக்கி தூதுவர் ரகிபே செகர்ஜிஓலு (Rakibe Şekercioğlu), சுவிஸ் கூட்டமைப்பின் தூதுவர் டொமினிக் பர்க்லர் (Dominik Furgler), ஜனாதிபதி பணிக்குழாம் பிரதம அதிகாரி அநுர திஸாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...