Monday, July 19, 2021 - 10:12am
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 666 பேர் உள்ளிட்ட 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஐந்து பேர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்விசேட நடவடிக்கைக்காக நாடளாவிய ரீதியில் 14,927 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment