Thursday, May 14, 2020 - 1:47pm
அவர்களுடன் 16 ஜப்பானியர்கள் வருகை
கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 288 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 102 எனும் விசேட விமானம், மலே விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (14) நண்பகல் 12.25 மணிக்கு வந்தடைந்துள்ளது.
இவ்விமானத்தில் 288 இலங்கையர்களுடன், ஜப்பான் பிரஜைகள் 16 பேரும் பயணித்துள்ளனர் என்பதோடு, அவர்கள் இன்று பகல் ஜப்பானின் நரீட்டாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
Add new comment