நாட்டில் மின் பாவனையில் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்க மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மின்சார பாவனை குறைவடைந்துள்ளது.

நாட்டின் நாளாந்த மின்சார பாவனை 49 கிகாவோட்டிலிருந்து 33 கிகாவோட்டாக குறைவடைந்துள்ளது.

இது சுமார் 30 சதவீதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியாகும் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
 


Add new comment

Or log in with...