Thursday, January 23, 2020 - 4:27pm
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சுமார் 06 மணிநேரமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் கடத்தப்பட்ட சம்பவத்தின் விசாரணை தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (23) காலை 9.15 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அவர் 06 மணிநேரம் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment