டோக்கியோ சர்வதேச விமானநிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பற்றியதை அடுத்து ஐவர் கொல்லப்பட்ட நிலையில் விமானத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
தரையிறங்கிய விமானம் அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதியதை அடுத்தே தீப்பற்றி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தில் இருந்த சுமார் 370 பேர் வரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக என்.எச்.கே. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து விமானநிலையத்தில் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டதாக விமானநிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் முழுவதும் தீ பரவியிருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் பரபரப்பாக காணப்படும் ஜப்பானின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தந்திருக்கும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது.