ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையான பதுளை, குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று (27) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ சமூன் ஜனாதிபதிக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மில் உட்பட ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.