பொத்துவில் நகரில் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப் தெரிவித்தார். அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் பொத்துவிலுக்கு விஜயம் செய்து இதற்கான இடத்தினை பார்வையிட்டுச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை பெருமளவில் தனியார் மருந்து விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து வருகின்றனர்.
அரச ஒசுசல கிளை ஒன்று இல்லாமையினால் தமக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நோயாளிகள் அரச ஒசுசல வில் மருந்தைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 40 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் நகரில் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை திறக்கப்படும் பட்சத்தில் லகுகல, பாணம, கோமாரி ஆகிய பிரதேசங்களில் சுமார் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்மையடையவுள்ளனர்.
(ஒலுவில் விசேட நிருபர்)