மின் கட்டணத்தையும் பொருட்களின் விலையையும் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் குறைக்க முடியுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாலேயே நிவாரணம் வழங்க முடியுமெனவும், அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“அரைகுறையாக நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியுமென்பதுடன், டொலர் கையிருப்பு அதிகரிப்பால் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.
வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். பொருட்களின் விலையை படிப்படியாக குறைக்க முடியுமென்று ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார். வரிச்சுமையை குறைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமென்பதுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பொருளாதாரத்துக்கு அதிக டொலர் சேர்க்கப்படும்” என்றார்.