போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் புகையிரத கடவைக்கு அண்மித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையில் முற்றுகையிட்டு விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பொழுது 55 தடைசெய்யபட்ட லேகிய பைகளையும் 11 போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை இதனை விற்பனை நோக்கில் உடைமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23 வயதான யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட சிங்கள மாணவன் ஒருவரை கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்புடைத்துள்ளனர்.
குறித்த மாணவனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் யாழ் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்திதுறை விசேட நிருபர்