220
கிழக்கு பங்களாதேஷில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
டாக்காவின் வட கிழக்காக 80 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பைராப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) இரவு பயணிகள் ரயில் ஒன்றும் சரக்கு ரயில் ஒன்றும் மோதியுள்ளன.
சமிக்ஞையில் ஏற்பட்ட தவறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.