நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலை காரணமாக மூன்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்நோய், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நோய் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நோய்கள் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சுய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தொடர்ந்து அதிக மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்நோய்கள் அதிகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)