இஸ்ரேல், பலஸ்தீன் யுத்தம் பற்றி இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பதால் அங்கே நேரடியாக எதுவும் ஆகப்போவதில்லை. மதக் கண்ணாடிகளை கழற்றி வைத்து_விட்டு, உண்மைகளை தேடுவோமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இஸ்ரேலில் இம்முறை ஹமாசின் திடீர் தாக்குதல் ஆரம்பமானது என்பது உண்மை. அதனால் இஸ்ரேலில் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதென்பதும் உண்மை. இதுபற்றி நான் பேச ஆரம்பித்த உடனேயே, நான் என்ன கூற வருகிறேன் என்பதை தேடி அறியாமலேயே சிலர் இங்கே என்னிடம் கோபித்து கொண்டனர். இதுபற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் நான் கடந்து போகிறேன். யுத்தம் என்பது வேறு. அது பல பத்தாண்டுகளாக இஸ்ரேல், பலஸ்தீன தரப்புகளுக்கு மத்தியில் நிகழ்கிறது. அதன் அடிப்படை, பாலஸ்தீனத்தை குறிவைத்திருக்கும் ஆக்கிரமிப்பு அநீதி. பிபிஸி,சீ.என்.என் ஆகியவற்றை விட, அல்-ஜெஸிரா, ஒப்பீட்டளவில் உண்மைகளை அதிகம் கூறுகிறது. அல்-ஜெஸிரா வில் இஸ்ரேலிய சேதங்களையும் காண்பிக்கிறார்கள். இஸ்ரேலிய வாதங்களையும் காட்டுகின்றனர். ஆனால், அதிக சேதம் பலஸ்தீனுக்குத்தான். காரணம் எளிமையானது. சேதம், பரிதாபம், பலஸ்தீன தரப்பில்தான் அதிகம். இங்கே நாம் பேசி. அதனால் அங்கே நேரடியாக எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும். எப்போதும், இன, மத கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு உண்மையை தேடுவோமென்றும் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இங்கே நாம் பேசுவதால் அங்கே எதுவும் ஆகாது
இஸ்ரேல், பலஸ்தீன் யுத்தம் பற்றி மனோ MP
289