வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள அவர், நாடு நெருக்கடியான நிலையில் இருந்தே இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. அந்த வகையில் கடந்த இரண்டு காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த நிலையில் காணப்படவில்லை.
அதனால் எதிர்வரும் இரண்டு காலாண்டுகளிலும் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையிலேயே 2024 ஆம் ஆண்டுக்கான செலவுகள் மற்றும் வருமானத்தை மதிப்பிட முடியும்.
அந்த வகையில் இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் மிக எளிதானதல்ல. மிக இலகுவாக வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து விட முடியாது.
மிக உயர் நிலையில் நிதி முகாமைத்துவ த்தை முன்னெடுத்தே அதனை மேற்கொள்ள முடியும். அதிகரித்த செலவுளை கட்டுப்படுத்துவதற்கான தேவை எமக்கு உள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்