359
கொழும்பின் நான்கு பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களிலேயே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசங்களில் நாளாந்தம் சுமார் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறாக உயர்ந்துள்ளதாக வைத்தியர் ருவான் விஜயமுனி குறிப்பிட்டார்.