அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் பேச்சாளர் அந்த விபரத்தை வெளியிட்டார். கமாண்டர் என்ற 2 வயதான அந்த நாய் ஜெர்மன் ஷெபர்ட் வகையைச் சேர்ந்ததாகும். அது இப்போது எங்கே உள்ளது என்று தெரியவில்லை.
2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு வந்த அது, அமெரிக்க உளவுச் சேவைப் பிரிவில் பணியாற்றும் 11 அதிகாரிகளைக் கடித்துள்ளது. அதனிடம் கடி வாங்கிய ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஏனெனில் நாய் வெள்ளை மாளிகையின் மற்ற ஊழியர்களையும் கடித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஊழியர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று அவர்களின் பேச்சாளர் எலிசபெத் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
கமாண்டர் கடைசியாக கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் காணப்பட்டது.