நாட்டுக்குள் சுமார் முன்னூறு மில்லியன் பெறுமதியான நாலு கிலோ கொகெய்ன் போதைப் பொருளை கொண்டுவந்த கென்யா நாட்டவர் விமான நிலையத்தில் கைதானார்.
இவர் கடந்த (24) ஞாயிற்றுக்கிமை டோகாவிலிருந்து QR 654 இலக்க விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார் .34 வயதான இவரை,சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது, இவரின் பயணப்பையில் முன்று பிஸ்கட் டின்களில் சூசகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கேன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சந்தைப் பெறுமதி 300 மில்லியன் ரூபாவென சுங்க பேச்சாளர் சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
எதியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து, கட்டாரின் டோகா விமான நிலையேமூடாக, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விசாரணையின் பின்னர், மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளின் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் இந்நபர் ஒப்படைக்கப்பட்டார்.