Thursday, April 28, 2016 - 4:00pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டனர்.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12236","attributes":{"alt":"","class":"media-image","height":"405","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
தற்போது (28) இடம்பெற்று வரும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், 06 அரசாங்க மருத்துவ பல்கலைகழக மாணவர்கள் இணைந்துள்ளனர்.
(படங்கள்: சுலோச்சன கமகே)
மருதானையிலிருந்து கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு வந்த குறித்த மாணவர்கள், லோட்டஸ் வீதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்படுகையில், அவர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்யப்பட்டது.
Add new comment