34 ஆவது பொலிஸ் மாஅதிபராக பூஜித் ஜயசுந்தர?

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரான பூஜித் ஜயசுந்தரவை அடுத்த பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கான ஆலோசனையை அரசியலமைப்பு சபை எடுத்துள்ளது.
 
அதற்கமைய, அவரை பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அதற்கமைய இலங்கையின் 33ஆவது பொலிஸ் மாஅதிபரான என்.கே. இளங்ககோன் தனது 36 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட இடத்திற்கே பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை கடந்த வாரம் (12) குறித்த இடத்திற்கு பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...