Tuesday, February 16, 2016 - 10:00am
ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற, நேற்று (15) சரணடைந்த பிக்குகள் நால்வரும் இன்று (16) ஹோமாகம நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களுள், ராவண பலய அமைப்பைச் சேர்ந்த இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள ராவய அமைப்பின் தலைவருமான அக்மீமண தயாரத்ன ஆகியோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அடையாள அணிவகுப்பின் பொருட்டே இவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment