Wednesday, February 10, 2016 - 6:30pm
புதிய சட்ட மாஅதிபராக ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை இன்று (10) அனுமதி வழங்கியுள்ளது.
சட்ட மாஅதிபர் யுவஞ்சன விஜேதிலக ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்படுவதனால் அவ்வெற்றிடத்திற்கு ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கான அனுமதியை அரசியலமைப்பு வழங்கியுள்ளதோடு, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் அனுமதியையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10333","attributes":{"alt":"","class":"media-image","height":"350","style":"width: 305px; height: 350px; float: left;","typeof":"foaf:Image","width":"305"}}]] ஓய்வு பெற்ற சட்ட மாஅதிபர் யுவஞ்சன் விஜேதிலக |
தற்போதைய மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான ஜயந்த ஜயசூரியவே இப்பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இலங்கையின் 29 ஆவது சட்டமா அதிபராக அவர் நியமனம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment