சந்தர்போல் ஓய்வு

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த சிவ்நரைன் சந்தர்போல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இவர் மேற்க்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா காலத்தில் இருந்து விளையாடி வருகிறார்.

இவர் கடந்த 1994ஆம் ஆண்டு கயானாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைச்சதம் அடித்தார். 164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ஓட்டங்களும், 268 ஒருநாள் போட்டிகளில் 8,778 ஓட்டங்களும் குவித்து சாதனை படைத்த இவரை சமீபகாலமாக மேற்கிந்திய தீவுகள் அணி புறக்கணித்தது. 

 


Add new comment

Or log in with...