Tuesday, December 29, 2015 - 12:45pm
புங்குடுதீவு மாணவி வித்யா கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 10 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களின் DNA மாதிரிகளின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக அடுத்த வழக்கு விசாரணை தினமான எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Add new comment