Friday, December 4, 2015 - 4:45pm
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேகநபரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு கைது செய்து இன்று (04) நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
சம்பவத்தை விசாரித்த நீதிபதி சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சந்தேகநபர் தொடர்ச்சியாக குறித்த நான்கு சிறுவர்களையும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து, நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்களும் நுவரெலிய அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நால்வரும் 13 -14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(க.கிஷாந்தன்)
Add new comment