இளைஞர்கள் இருவர் ஆற்றில் மூழ்கினர்

சீதுவ அரம்ப பாலத்திற்கு அருகில், தண்டுகம் ஓயாவில் மூழ்கிய இருவர் காணமல் போயுள்ளனர்.
 
நண்பர்களுடன் இன்று (29) பிற்பகல் வேளையில், குளிக்கச் சென்ற போதே அவர்கள் இருவருக்கும் இந்த கதி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
ராகமை மற்றும் கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றம்  19 வயதான இளைஞர்கள் இருவரே இவ்வாறு காணமல் போயுள்ளனர்.
 
கடற்படையின் உதவியுடன் அவர்களைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Add new comment

Or log in with...