மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (16) சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
 
அரசியலமைப்பு சபையின் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் கீழ், நியமிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவுக்கு, தலைவராக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
 
முன்னாள் சட்ட வரைஞரான நலின் அபேசேகர மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சேவைக் காலம் முடிவடைந்திருந்தது. ஆயினும் அவரது சேவையைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது சேவைக் காலத்தை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7136","attributes":{"alt":"","class":"media-image","height":"536","style":"width: 400px; height: 429px;","typeof":"foaf:Image","width":"500"}}]]
 
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல்

Add new comment

Or log in with...