Wednesday, September 16, 2015 - 1:45pm
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான மஹேல ஜயவர்தன இங்கிலாந்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் பாகிஸ்தானுடனான இங்கிலாந்தின் டெஸ்ட் தொடரில் மஹேல ஜயவர்தன இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படவுள்ளார்.
குறித்த போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் ஏனைய இரு போட்டிகளும் ஒக்டோபர் 22 இல் துபாயிலும், நவம்பர் 01 இல் சாஜாவிலும் இடம்பெறவுள்ளது.
Add new comment