Monday, September 14, 2015 - 12:30pm
மேல்மாகாண சபையில் புதிய அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேல்மாகாண நிதி, நீதி, சமாதானம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள், பொருளாதார அபிவிருத்தி, மின்சக்தி, சூழல், நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
அத்துடன் காமினி திலகசிறி, ரஞ்சித் சோமவங்ச, நிஷாந்த வர்ணசிங்க, லலித் வணிகரத்ன ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
முன்னாள் மின்சக்தி அமைச்சராக இருந்த உபாலி கொடிகாரவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment