Tuesday, September 1, 2015 - 12:00pm
மறுபதிப்பு:
இஷாந்த் சர்மாவுக்கும் தினேஸ் சந்திமாலுக்கும் ஒரு போட்டியில் விளையாடத்தடை;
திரிமான்ன மற்றும் சந்திமாலுக்கும் அவர்களது போட்டிக்காக வழங்கப்படும் தொகையில் 50 வீதம் செலுத்த ஐ.சி.சியினால் உத்தரவு
முதல் பதிப்பு:
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாளான நேற்று (31) இரு நாட்டு வீரர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த் தர்க்கம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (31) இஷாந்த் சர்மா, தம்மிக பிரசாத், தினேஸ் சந்திமால், லஹிரு திரிமான்ன ஆகியோர் போட்டியின் ஒழுக்க விதியை மீறி செயற்பட்டமை தொடர்பிலேயே ஐ.சி.சியினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இறுதி நாள் போட்டி முடிவடைந்ததை அடுத்து குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறிப்பிட்ட வீரர்களுக்கு எதிராக தண்டப் பணம் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Add new comment