Thursday, August 27, 2015 - 12:30pm
பாதையோரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர் மீது காரை செலுத்தியதன் மூலம் கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் கந்தானை, வெலிகம்பிட்டிய சந்தியில் குறித்த நபர் மீது வாகனத்தை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற குறித்த சாரதியைச் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த கந்தாலை பொலிஸார், இறந்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment