செயலர் பதவியிலிருந்து நீங்குவதாக சுசில் ஜனாதிபதிக்கு கடிதம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
நேற்றிலிருந்து (24) அமுலாகும் வகையில் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாபா ஆகியோரை அவர்களது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அக்கட்சிகளின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கமையவும் கட்சியின் யாப்பிற்கமைய அத்தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, ஐ.ம.சு.முவின் தற்காலிக செயலாளராக பேராசிரியர் டப்ளியூ.ஏ. விஷ்வ வர்ணபாலவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 

Add new comment

Or log in with...