விலையில் மோசடி செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

வர்த்தகர் குறிப்பிட்ட சில பொருட்களை தாங்களே பொதி செய்து அவற்றை உரிய விலையில் விற்காது, அதிக விலையில் விற்பதாகக் கிடைக்கப்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமைய விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 
சீனி, பருப்பு, கௌபி மற்றும் பல்வேறு தானியங்கள் பொதி செய்யப்பட்டு அதிக விலையில் விற்பதாக தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...