Thursday, August 6, 2015 - 10:30am
குறிப்பிட்ட குழு ஒன்று தமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சிக்கு அவப்பெயரை உண்டுபண்ணும் வகையிலான பேஸ்புக் கணக்கொன்றை செயற்படுத்தி வருவதாக, தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜே.வி.பி. புகாரளித்துள்ளது.
குறித்த பேஸ்புக் கணக்கில், தங்களது கட்சியின் கடிதத் தலைப்பை ஒத்த கடிதத்தலைப்பை பயன்படுத்தி, தங்களது கட்சி உயர்பீடத்தினரின் போலி கையெழுத்துகளுடனான போலியான தகவல்களை பிரசுரிக்கப்படுவதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவினால் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி. கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட கணக்கு:
Add new comment