கொட்டாஞ்சேனை சம்பவம்: மற்றொருவர் பலி

கடந்த ஜூலை 31 ஆம் திகதி, கொட்டாஞ்சேனையில் ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமுற்று கவலைக்கிடமாக இருந்த மற்றொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, புளத்சிங்களவைச் சேர்ந்த, 36 வயதான நிரோசன் சம்பத் என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சம்பவத்தில் 42 வயதான சித்தி நசீமா எனும் பெண் பலியானதோடு மேலும் 13 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...