விசேட தேவையுடையோருக்கு விசேட போக்குவரத்து வசதி

விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்து தரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக குறிப்பிட்ட தேவையுடைய வாக்காளர் தனது போக்குவரத்து தேவை குறித்து விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் குறித்த தேர்தல் அதிகாரியிடம் தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன் (ஓகஸ்ட் 09 அல்லது அதற்கு முன்னர்) கையளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர் குறித்த தகுதிகளை பூர்த்தி செய்யுமிடத்து விசேட போக்குவரத்து அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


Add new comment

Or log in with...