ஐ.ம.சு.முவில் ஒரு பெண் கூட தேசியப்பட்டியலில் இல்லை

பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள் அரசியலில் பெண் தலைமைத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என சிவில் சமூகங்கள் மற்றும் பெண் உரிமை அமைப்புகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஐ.ம.சு.முவில் எந்தவொரு பெண்ணும் தேசியப்பட்டியலில் இணைக்கப்படவில்லை என பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. முன்னாள் எம்.பியான கமலா ரணதுங்க இவ்விடயம் குறித்து தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளபோதிலும் தாம் ஶ்ரீ.ல.சு.க வில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த முறை தேர்வான நடிகை மாலினி பொன்சேகாவிற்குக் கூட இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...