றிஸ்வான் சேகு முகைதீன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் விபத்து காரணமான மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸார் ஐவருக்கும் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு வேளையில் யாழ்ப்பாணம் -கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் நீதவான் நிதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கினார்.
Add new comment